மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' |

விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தபடியாக ரஜினியின் 169வது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க ரஜினியிடம் நெல்சன் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்ட போதும், பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதிருப்தி அடைந்தார் ரஜினி. அதனால் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை தனது 169வது படத்திற்கு திரைக்கதை எழுத வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகின.
ஆனால் ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது படத்தில் இளம் வயது ரஜினி வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அரபிக்குத்து பாடலைத்தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதாக கூறப்படுகிறது.




