நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தபடியாக ரஜினியின் 169வது படத்தை இயக்கப் போகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிக்க ரஜினியிடம் நெல்சன் சொன்ன கதை அவருக்கு பிடித்து விட்ட போதும், பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் அதிருப்தி அடைந்தார் ரஜினி. அதனால் தனது ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமாரை தனது 169வது படத்திற்கு திரைக்கதை எழுத வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிப்பதாக ஆரம்பத்திலிருந்தே செய்திகள் வெளியாகின.
ஆனால் ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இப்போது படத்தில் இளம் வயது ரஜினி வேடத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு அரபிக்குத்து பாடலைத்தொடர்ந்து இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதுவதாக கூறப்படுகிறது.