நானி - சாய்பல்லவி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை | எப்படி இருந்த கீர்த்தி இப்படி | கனடாவிலிருந்து வந்த பாடகி | வருகிறான் ‛சோழா சோழா' | குடும்பத்துடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த சூரி | திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் காட்சியை பார்த்து ரசித்த தனுஷ் | ‛லால் சிங் தத்தா' படத்தை இணையதளத்தில் வெளியிட்ட இரண்டு பேர் கைது | ஹிந்தியில் அறிமுகமாகிறார் அனுபமா பரமேஸ்வரன் | ஆர்ஆர்ஆர் படத்திற்கு 99 சதவீதம் ஆஸ்கர் கிடைக்க வாய்ப்பு : அனுராக் காஷ்யப் கணிப்பு | கிர்த்தி ஷெட்டிக்கு இரண்டாவது அதிர்ச்சி |
பாடகியாக இருந்து நடிகையாக மாறிய மிகச் சில நடிகைகளில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸும் ஒருவர். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் கடந்த 15 வருடமாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். இதனால் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் மம்தா மோகன்தாஸுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது..
இந்தநிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மம்தா மோகன்தாஸ் அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சல்மான்கானை சந்தித்து உரையாடியுள்ளார்.. அதன்பின் அங்கு நிருபர்களிடம் பேசியபோது சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்... மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர்களான அபிஷேக் பச்சன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருடனும் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மம்தா..