இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம், இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பல திரையரங்குகளில் 50 நாட்களுக்கும் குறையாமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதுடன் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் என்கிற மிகப்பெரிய சாதனை இலக்கையும் இந்த படம் கடந்தது. இந்தப்படத்தின் இரண்டு பாகங்களையும் தயாரித்த ஹோம்பலே நிறுவனம் அடுத்ததாக மலையாளத்தில் பிரித்திவிராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
டைசன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். லூசிபர், புரோ டாடி ஆகிய படங்களை தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கும் மூன்றாவது படம் இது. லூசிபர் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். கேஜிஎப் 2 படத்தை மலையாளத்தில் பிரித்திவிராஜ் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.