அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பூலோகம் படத்திற்கு பின் இயக்குனர் கல்யாண், நடிகர் ஜெயம் ரவி இணைந்துள்ள படம் ‛அகிலன்'. நாயகியாக பிரியா பவானி சங்கர் போலீஸாக நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் துறைமுகத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களின் பின்னணியே படத்தின் கதையாக அமைந்துள்ளது என புரிந்து கொள்ள முடிகிறது. துறைமுகத்தில் கிங்காக அகிலன் என்ற வேடத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். அவரை மீறி எந்த ஒரு விஷயமும் நகராது. ‛‛ஐயம் தான் கிங் ஆப் இந்தியன் ஓசன், கடலில் இருந்து உப்பை பிரிக்கலாம் ஆனால் ஹார்பரில் இருந்து அகிலனை பிரிக்க முடியாது'' என டயலாக் பேசி உள்ளார் ஜெயம் ரவி. அந்தளவுக்கு அந்த பகுதியின் டானாக அவர் உள்ளார் என புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.