ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவிற்கு கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா மற்றும் எப்-3(ஒரு பாடல் மட்டும்) ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன. இதுதவிர தற்போது ஹிந்தியில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும், தமிழிலும் முன்னணி இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களின் சாய்ஸாக முதலிடத்தில் இருக்கிறார் பூஜா ஹெக்டே.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாக உள்ள பாவாடியுடே பகத்சிங் என்கிற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தது. அதற்கு காரணம் ஹரிஷ் சங்கர் கடைசியாக இயக்கிய துவ்வாட ஜெகநாதம் மற்றும் கத்தலகொண்டா கணேஷ் ஆகிய இரண்டு படங்களிலும் தொடர்ந்து பூஜா ஹெக்டே தான் கதாநாயகியாக நடித்தார். அதனால் இந்த படத்திலும் பூஜா கிட்டே தான் கதாநாயகி என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது.
இந்த நிலையில்தான் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் என்கிற தகவல் கசிந்துள்ளது. காரணம் தற்போது தமிழ் மற்றும் ஹிந்தியில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து வருவதாலும் பவன் கல்யாண் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு தாமதமாகிக் கொண்டே செல்வதாலும் பூஜா ஹெக்டே இந்த முடிவை எடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. பவன் கல்யாண் தற்போது கிரிஷ் இயக்கத்தில் ஹரிஹர வீரமல்லு என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு தான் ஹரிஷ் சங்கர் படத்திற்கு வருவார் என்று தெரிகிறது.