ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா |
சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பத்து தல படத்தில் நடிக்க தயாராகி வந்தார். இந்நிலையில் சிம்பு தந்தை டி.ராஜேந்தர் சமீபத்தில் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிம்புவின் பத்து தல இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இதனிடையே சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது . கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு உடன்பாடு இல்லாத காரணத்தினாலும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் அப்படத்தை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்புவின் புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது..
ஆனால் இதுபற்றி விசாரித்தபோது அப்படியெல்லாம் இல்லை. இவையெல்லாமே வதந்தி என்றும், முழுக்க, முழுக்க காமெடி டிராக்கில் உருவாக இருக்கும் இப்படம் உருவாகுவது உறுதி என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது .