என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
இந்தியத் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். சென்னை, மும்பை, துபாய், அமெரிக்கா என பறந்து கொண்டிருப்பவர். படங்களுக்கான பின்னணி இசை, இசை நிகழ்ச்சிகள் என கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய செல்போன், இன்டர்நெட் யுகத்தில் அவைகள் இல்லாமல் எங்காவது சென்று ஒரு வாரம் ஓய்வெடுக்கலாமா என்றுதான் பலரும் யோசிப்பார்கள். அப்படி ஒரு ஓய்வு ஏஆர் ரஹ்மானுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், ஒரு வாரமல்ல, வெறும் இரண்டே நாட்கள்தான்.
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் 'ஆடுஜீவிதம்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான்தான் இசையமைப்பாளர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டிலுள்ள வாடி ரம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அப்படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படக்குழுவினருடன் இருந்து வருகிறார் ரஹ்மான்.
அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மலையில் ஒட்டகங்ள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு நாட்களாக போன் இல்லை, இன்டர்நெட் இல்லை, ஒட்டகமும், ஆடுகளும் மட்டுமே நண்பர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். போன், இன்டர்நெட் இல்லாத இரண்டு நாட்களாவது ஏஆர் ரகுமானுக்குக் கிடைத்தது ஒரு வரமே.