பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
இந்தியத் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். சென்னை, மும்பை, துபாய், அமெரிக்கா என பறந்து கொண்டிருப்பவர். படங்களுக்கான பின்னணி இசை, இசை நிகழ்ச்சிகள் என கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார்.
இன்றைய செல்போன், இன்டர்நெட் யுகத்தில் அவைகள் இல்லாமல் எங்காவது சென்று ஒரு வாரம் ஓய்வெடுக்கலாமா என்றுதான் பலரும் யோசிப்பார்கள். அப்படி ஒரு ஓய்வு ஏஆர் ரஹ்மானுக்குக் கிடைத்துள்ளது. ஆனால், ஒரு வாரமல்ல, வெறும் இரண்டே நாட்கள்தான்.
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கும் 'ஆடுஜீவிதம்' படத்திற்கு ஏஆர் ரஹ்மான்தான் இசையமைப்பாளர். இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டிலுள்ள வாடி ரம் என்ற இடத்தில் நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அப்படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படக்குழுவினருடன் இருந்து வருகிறார் ரஹ்மான்.
அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மலையில் ஒட்டகங்ள் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இரண்டு நாட்களாக போன் இல்லை, இன்டர்நெட் இல்லை, ஒட்டகமும், ஆடுகளும் மட்டுமே நண்பர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். போன், இன்டர்நெட் இல்லாத இரண்டு நாட்களாவது ஏஆர் ரகுமானுக்குக் கிடைத்தது ஒரு வரமே.