மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகர் யார் என்றால் அது அசோக் செல்வன் தான். ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த அசோக் செல்வன் ‛ஓ மை கடவுளே' என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து, அந்த படத்தின் வெற்றியின் மூலம் பிசியான நடிகர் ஆகிவிட்டார்.
மன்மதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள், ஹாஸ்டல் படங்களில் நடித்த அவர் தற்போது வேழம் என்ற படத்தில் நடித்து முடித்திருகிறார். இதில் ஜனனி ஐயர், ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் ஹிரோயின், 24ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இது தவிர ரா.கார்த்திக் இயக்கத்தில் 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா, ஷிவதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2 படங்களின் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரிக்கிறார். இதில் மேகா ஆகாஷ் அசோக் செல்வன் ஜோடியாக நடிக்கிறார். வருகிற 8ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.