நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
காளிதாஸ் படத்திற்கு பிறகு பரத் மீண்டும் பிசியான நடிகராகி விட்டார். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த நடுவன் வெளியானது. தற்போ 8 பிளஸ், லவ், முன்னரிவான் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து வந்த மிரள் படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பிரமோஷன் பணிகளை துவக்கி வைத்துள்ளார், என்றார்.