‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
அரவிந்த்சாமி நடித்து முடித்துள்ள நரகாசுரன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் ஆகிய 3 படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. இதில் கள்ளபார்ட்டுக்கு மட்டும் இப்போது நல்ல காலம் பிறந்திருக்கிறது. வருகிற 24ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த்சாமி மற்றும் ரெஜினா நடித்துள்ள இந்த படத்தை என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்ற, இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா பணியாற்றி உள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறியதாவது: படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின் திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்தை இதில் பார்க்கலாம். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்கிறார்.