இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் |
மாநாடு படத்தை அடுத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, அரவிந்தசாமி வில்லனாக கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி அதன் பிறகும் சில படங்களில் நடித்தவர், இப்போது மீண்டும் இந்த படத்தில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர்கள் நடிக்கும் ஆக்சன் காட்சியை ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கி வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ படமாக்கி வருகிறார். திரில்லர் மற்றும் பீரியட் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.