பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு | திருமணமானவரை டேட்டிங் செய்ய மாட்டேன் : ஜிவி பிரகாஷ் குடும்ப பிரச்னையில் மவுனம் கலைத்த திவ்யபாரதி | ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி |
மாநாடு படத்தை அடுத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கிய வெங்கட் பிரபு தற்போது தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, அரவிந்தசாமி வில்லனாக கமிட்டாகி இருக்கிறார். ஏற்கனவே மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமி அதன் பிறகும் சில படங்களில் நடித்தவர், இப்போது மீண்டும் இந்த படத்தில் அதிரடியான வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர்கள் நடிக்கும் ஆக்சன் காட்சியை ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து படமாக்கி வருகிறார்கள். இந்த சண்டைக் காட்சியை ஸ்டன்ட் மாஸ்டர் மகேஷ் மேத்யூ படமாக்கி வருகிறார். திரில்லர் மற்றும் பீரியட் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைக்கிறார்கள்.