‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‛விக்ரம்' படம் ஜூன் 3ல் திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி, பஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பாடல்கள், டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றன.
விக்ரம் படத்தை தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட உள்ளார் கமல். இதற்காக நாடு முழுக்க புரொமோஷன் செய்து வருகிறார். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கமலிடம் செய்தியாளர்கள் வட - தென்னிந்திய பேதம் பற்றி கேட்டனர். அதற்கு ‛‛நான் ஒரு இந்தியன். நீங்கள் யார் என்றவர். என்னிடம் வடக்கு, தெற்கு என்ற பேதம் இல்லை. தாஜ்மஹால் என்னுடையது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உங்களுடையது. கன்னியாகுமரி எந்தளவு உங்களுக்கு சொந்தமோ, அதே அளவு காஷ்மீரும் எனக்கு சொந்தம்'' என கூறி நாம் அனைவரும் இந்தியரே என ஒற்றுமைக்கான பாலமாக கமல் பதில் அளித்தார்.