டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது | பொன்னியின் செல்வன் - நந்தினியாக ஐஸ்வர்யா ராய் | 'தி கிரேமேன்' - பட புரொமோஷனுக்காக ஹாலிவுட் பறந்த தனுஷ் | விஜய்யின் வாரிசு - பிரெஞ்சு படத்தின் தழுவலா? | பார்த்திபனை ஆச்சரியப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | உலக அளவில் சாதனை படைத்த 'கேஜிஎப்' போஜ்புரி | ஜவான் - ஷாருக்கானுக்கும் வில்லன் விஜய் சேதுபதி? | ஷங்கரின் படத்தில் நடனத்திற்கு 1000 பேர், சண்டைக்கு 1200 பேர் |
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் சில மாதங்களுக்கு முன் மும்பையில் சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை விருந்தில் கலந்துகொண்டார். அப்போது போலீசார் நடத்திய ரெய்டில் 14 பேருடன் சேர்த்து ஷாருக்கானின் மகன் ஆரியன் கானும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த போதைப்பொருள் குறித்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆரியன் கானுக்கு எதிராக ஆதாரங்கள் எதுவும் இல்லை, அவர் அப்பாவி என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் இந்த வழக்கில் இருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்படுவார் என தெரிகிறது.