இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? |
தமிழில் சிவா - அஜித் கூட்டணி போல, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் மோகன்லால் கூட்டணி பிரிக்க முடியாத வலுவான கூட்டணியாக அமைந்துவிட்டது. திரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் 7 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்தது ராம் என்கிற படத்திற்காகத்தான். ஆனால் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டிய அந்த படம் கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கேரளாவுக்குள்ளேயே படப்பிடிப்பு நடத்தும் விதமாக திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து அதையும் வெற்றி படமாக்கினார் ஜீத்து ஜோசப்.
மீண்டும் கொரோனா சூழல் சரியாகாத நிலையில் மோகன்லாலை வைத்து மீண்டும் டுவல்த் மேன் என்கிற படத்தை ஒரே லொகேஷனில் படமாக்கி சமீபத்தில் வெளியிட்டார் ஜீத்து ஜோசப். இந்த படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது இதைத்தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ராம் திரைப்படத்தை விரைவில் துவங்க இருப்பதாக சமீபத்தில் கூறினார் ஜீத்து ஜோசப்.
மேலும் இன்னொரு பேட்டியில் ஜீத்து ஜோசப் கூறும்போது ராம் படத்தை முடித்த பின்பு, இரண்டு படங்களை இயக்குவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அதில் மோகன்லால் நடிக்கும் படம் ஒன்று என்றும் கூறியுள்ளார். இவர்களது கூட்டணி அடுத்தடுத்த படங்களில் தொடர்வதற்கு ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்..