போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்த இந்தி நடிகர் சஞ்சய் தத், ரஜினியின் அழைப்பை ஏற்று அவரது இல்லத்திற்கு போய் சந்தித்து பேசினார். ஹரி இயக்கத்தில், விக்ரம்-த்ரிஷா நடிப்பில் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த சாமி படம், தற்போது இந்தியில் "போலீஸ் கிரி" என்ற பெயரில் ரீ-மேக்காகி வருகிறது. இதில் சஞ்சய் தத் ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சஞ்சய் சத், சென்னை வந்திருப்பதை கேள்விப்பட்டு நடிகர் ரஜினிகாந்த், சஞ்சய் தத்தை தமது இல்லத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். அதன்படி சஞ்சய் தத்தும் ரஜினியை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். சஞ்சய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார் ரஜினி. சஞ்சய் உடன் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் அகர்வாலும் சென்று இருந்தனர். சுமார் 4மணி நேரம் ரஜினி-சஞ்சய் சந்திப்பு நீடித்தது. அப்போது இருவரும் தங்களது சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். சஞ்சய் புறப்பட்ட போது அவருடன் ரஜினி குடும்பத்தார் போட்டோ எடுத்து கொண்டனர். கூடவே சஞ்சய் தத்தின் குழந்தைகளுக்கு பரிசு பொருள் வழங்கியுள்ளார் லதா ரஜினி.