வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

சுந்தர்.சியின் உதவியாளரான பத்ரி இதுவரை காமெடி படங்கள் இயக்கி இருக்கிறார். முதன் முறையாக ஒரு சைக்கோ கில்லர் படம் இயக்கியுள்ளார். அது பட்டாம்பூச்சி. இதில் சைக்கோவாக ஜெய் நடிக்க அவரை பிடிக்க துரத்தும் போலீஸ் அதிகாரியாக சுந்தர்.சி நடித்துள்ளார். குஷ்பு தயாரித்துள்ளார்.
ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசை அமைகிறார் . சமீபத்தில் வெளியாகிய பட்டாம்பூச்சி எனும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'வேட்டைகள் ஆரம்பம் ' எனும் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
பொதுவாக ஹீரோ ஓப்பனிங் சாங், பில்டப் சாங், டூயட் சாங், ரோமான்ஸ் சாங்க, சேட் சாங் இப்படித்தான் படங்களில் இடம்பெறும். முதன் முறையாக இந்த படத்தில் சைக்கோ கில்லர் சாங் இடம் பெற்றுள்ளது. ஒரு சைக்கோவின் கொலையும், அவனது கேரக்டரும் எப்படி இருக்கும் என்பதை இந்த பாடலில் ரத்தம் தெரிக்க சொல்லியிருக்கிறார்கள். பாடலை பா.விஜய் பாடலை எழுதியுள்ளார், இசை அமைப்பாளர் நவநீத் சுந்தர், நிவாசுடன் இணைந்து பாடி உள்ளார். பாடல் வரிகள் இதோ...
யாரோ நீ யாரோ தீய தூதனே
சாவின் ராஜாங்கம் ஆளும் தேவனே
ஈரம் இல்லாமல் கொல்லும் ஜீவனே
கண்ணில் பாதாளம் காட்டும் மாயனே
கெஞ்சிக் கேட்டால் கொஞ்சிக் கொஞ்சி
கொன்று தீர்ப்பான் இந்த நல்லவன்
மூச்சில்லாமல் பேச்சில்லாமல்
மேலே சேர்ப்பதில் மேதையானவன்
வேட்டைகள் வேட்டைகள் ஆரம்பம்
கூச்சல்கள் கூச்சல்கள் ஆனந்தம்
யாரிவன் கோட்டைக்குள் போனாலும்
மண்ணோடு மண்ணாகும் பேரின்பம்
மூச்செல்லாம் பேச்செல்லாம் நின்றாலும்
மொத்தத்தில் உள்ளத்தில் சந்தோஷம்
இப்படி இந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன.




