‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை இணைத்து ஒரு படம் இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இந்த படத்தில் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். அதேசமயம் பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சுந்தர். சி. இப்படத்தில் வில்லனாக ஜெய் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில், இந்த படத்திற்கு பட்டாம்பூச்சி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதோடு இப்படம் மே மாதம் ரிலீசாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.