ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்-13ம் தேதி வெளியாக உள்ளது.. ஆனாலும் இப்போது வரை இந்தப்படத்தில் வில்லனாக எந்த நடிகர் நடித்துள்ளார் என்கிற விஷயத்தை சஸ்பென்சாகவே வைத்துள்ளார்கள். முதலில் செல்வராகவன் வில்லன் என்றார்கள்.. ஆனால் அவரோ வில்லன்கள் கூட்டத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரியாக தான் நடித்துள்ளார்.
இந்தப்படத்தின் டிரைலரில் முகமூடி அணிந்த வில்லன் நபரை பார்த்துவிட்டு இந்தப்படத்தில் நடித்துள்ள மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி மனிதர் என்றும், அவர்தான் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூட சொல்ல ஆரம்பித்தார்கள்.
ஆனால் அந்த முகமூடி மனிதரே தான் யார் என்கிற உண்மையை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் வேறு யாருமல்ல.. பாலிவுட் நடிகர் அங்கூர் விகால் தான்.. அதுமட்டுமல்ல மூன்று வருடங்களுக்கு முன் தமிழில் வெளியான மெஹந்தி சர்க்கஸில் கதாநாயகியின் முறை மாப்பிள்ளையாக நடித்திருந்ததும் இவர் தான். ஆனால் பீஸ்ட் படத்தில் இவர் தான் மெயின் வில்லனா என்கிற கேள்விக்கு மட்டும் மனிதர் பதில் சொல்லாமல் நழுவி விட்டார்..