எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழில் கடந்த இரண்டு வாரங்களாக அடுத்தடுத்து ரீமேக் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொதுவாக ஒரு மொழியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுவார்கள். தமிழிலும் அது போல நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பல வெற்றி பெற்றுள்ளன, பல தோல்வியையும் அடைந்துள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் “பயணிகள் கவனிக்கவும், அக்கா குருவி, கூகுள் குட்டப்பா, விசித்திரன்” ஆகிய ரீமேக் படங்கள் வெளிவந்துள்ளன. மலையாளத்தில் வெளிவந்த 'விக்ருதி' தமிழில் 'பயணிகள் கவனிக்கவும்' படமாகவும், ஈரானிய மொழியில் வெளிவந்த 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' படம் தமிழில் 'அக்கா குருவி' ஆகவும், மலையாளத்தில் வெளிவந்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் 5.25' படம் தமிழில் 'கூகுள் குட்டப்பா' ஆகவும், மலையாளத்தில் வெளிவந்த 'ஜோசப்' படம் தமிழில் 'விசித்திரன்' ஆகவும் வெளிவந்துள்ளது.
இன்னும் கொஞ்ச காலத்தில் இப்படியான ரீமேக் படங்களுக்கு வரவேற்பு மிகவும் குறைய வாய்ப்புள்ளது. இந்த ஓடிடி காலத்தில் சப்--டைட்டில்களுடன் மற்ற மொழிப் படங்களும் ஓடிடியில் வெளிவருவதால் பலம் அவற்றைப் பார்த்துவிடுகின்றனர். மேலும், சில படங்களை ஓடிடிக்காக மட்டுமே கூட டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். அதனால், இனி ரீமேக் படங்களின் உரிமைகளை அதிக விலை கொடுத்து வாங்கி அவற்றைத் தயாரிப்பது நஷ்டத்தை மட்டுமே ஏற்படுத்தும்.