'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கன்னட நடிகையான பிரியங்கா மோகன், தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள பிரியங்கா மோகன், சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அவர், ஒரு பதிவு போட்டு உள்ளார்.
அதில், துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு இப்போதுதான் நனவாகி இருக்கிறது. அந்த நாட்டின் அற்புதமான கடற்கரையில் ஏராளமான அதிசயங்கள் இருந்தன. அங்குள்ள ஒவ்வொரு நகரமும் பல மாயாஜாலங்களைக் கொண்டு இருக்கிறது. அவற்றை நான் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் கண்டு ரசித்தேன். இந்த பயண அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது அப்படியொரு அற்புதமான பயணம் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். பிரியங்கா மோகனின் இந்த பதிவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் லைக் செய்துள்ளார்கள் .