'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

கன்னட நடிகையான பிரியங்கா மோகன், தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தார். தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பாலோயர்களை கொண்டுள்ள பிரியங்கா மோகன், சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அவர், ஒரு பதிவு போட்டு உள்ளார்.
அதில், துருக்கி நாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவு இப்போதுதான் நனவாகி இருக்கிறது. அந்த நாட்டின் அற்புதமான கடற்கரையில் ஏராளமான அதிசயங்கள் இருந்தன. அங்குள்ள ஒவ்வொரு நகரமும் பல மாயாஜாலங்களைக் கொண்டு இருக்கிறது. அவற்றை நான் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடனும் கண்டு ரசித்தேன். இந்த பயண அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது அப்படியொரு அற்புதமான பயணம் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். பிரியங்கா மோகனின் இந்த பதிவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் லைக் செய்துள்ளார்கள் .