மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
நடிகர் விஜய் தற்போது முதன்முறையாக நேரடியாக தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தை முன்னணி இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். இந்த படம் தெலுங்கில் உருவானாலும் கூட தமிழ் ரசிகர்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத வகையில் உருவாக்க வேண்டுமென, தமிழ் நடிகர்களான சரத்குமார், ஷாம், பிரகாஷ்ராஜ், யோகிபாபு என பார்த்து பார்த்து தேர்வு செய்து இந்த படத்தில் நடிக்க வைத்து வருகிறார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் நடிகர் பிரபு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தெறி படத்தை தொடர்ந்து இந்தப்படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் பிரபு.
பிரபுவை பொருத்தவரை கடந்த 2010க்குப்பின் தெலுங்கில் ஒரு முக்கிய குணசித்திர நடிகர் ஆகவே மாறிவிட்டார். ஆனாலும் கடந்த 2013ல் வெளியான ஓங்கோல் கீதா என்கிற தெலுங்கு படத்தில் நடித்த பிரபு, அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்பது வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிப்பது பற்றிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும் நடிகை ஜெயசுதாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளனர்.