நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

இந்தியத் திரையுலகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த நான்காவது படமாக 'கேஜிஎப் 2' படம் புதிய சாதனையை படைத்தது. கன்னடத் திரைப்படம் ஒன்று இந்த அளவிற்கு மாபெரும் வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை.
அப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது இந்திய அளவில் கவனம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல்.
இதனிடையே, பிரசாந்த் நீலை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய சில முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனவாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம் பிரசாந்த் நீல். இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு படம் செய்து தாருங்கள் என அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ராஜமவுலிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரசாந்த் நீல் தான் இருக்கிறாராம். 'சலார்' படமும் வெற்றி பெற்றுவிட்டால் 100 கோடி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.