ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த நான்காவது படமாக 'கேஜிஎப் 2' படம் புதிய சாதனையை படைத்தது. கன்னடத் திரைப்படம் ஒன்று இந்த அளவிற்கு மாபெரும் வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை.
அப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது இந்திய அளவில் கவனம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல்.
இதனிடையே, பிரசாந்த் நீலை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய சில முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனவாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம் பிரசாந்த் நீல். இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு படம் செய்து தாருங்கள் என அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ராஜமவுலிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரசாந்த் நீல் தான் இருக்கிறாராம். 'சலார்' படமும் வெற்றி பெற்றுவிட்டால் 100 கோடி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.