தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' |
இந்தியத் திரையுலகத்தில் ரூ.1000 கோடி வசூலித்த நான்காவது படமாக 'கேஜிஎப் 2' படம் புதிய சாதனையை படைத்தது. கன்னடத் திரைப்படம் ஒன்று இந்த அளவிற்கு மாபெரும் வசூலைக் குவித்திருப்பது இதுவே முதல் முறை.
அப்படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது இந்திய அளவில் கவனம் பெறும் இயக்குனர்களில் ஒருவராக மாறிவிட்டார். அவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படத்திற்குப் பிறகு ஜுனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்று ஒரு தகவல்.
இதனிடையே, பிரசாந்த் நீலை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய சில முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனவாம். இதனால், தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்திவிட்டாராம் பிரசாந்த் நீல். இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு படம் செய்து தாருங்கள் என அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
தென்னிந்தியத் திரையுலகத்தில் ராஜமவுலிக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் பிரசாந்த் நீல் தான் இருக்கிறாராம். 'சலார்' படமும் வெற்றி பெற்றுவிட்டால் 100 கோடி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.