மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
தெலுங்கில் 2020ம் ஆண்டு வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஒரு படம் 'ஹிட்'. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த விஷ்வக் சென் நடித்து அடுத்து 'அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்' என்ற படம் வெளிவர உள்ளது. அப்படத்திற்காக ஒரு யு டியூபரை வரவழைத்து ஐதராபாத் வீதிகளில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு அந்த யு டியூபர் தற்கோலை செய்து கொள்வது போல 'பிரான்க்' நிகழ்ச்சியை நடத்தினர். அதற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. விஷ்வக் சென் மீதும் வழக்குகள் போடப்பட்டது.
அது குறித்து விவாதிக்க விஷ்வக் சென்னை தெலுங்கு செய்தி சேனலான டிவி 9 விவாதம் ஒன்றிற்கு அழைத்தது. அப்போது விஷ்வக் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தார் செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி. அதனால் கோமடைந்த விஷ்வக் சென் பேசும் போது ஒரு பெரிய கெட்ட வார்த்தையை நேரலையின் பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமடைந்த செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி, விஷ்வக் சென்னை ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்படி 'கெட் அவுட்' சொன்னார். தேவி அவரது செயலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் மைக்கை கழட்டி வைத்து விஷ்வக் சென் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.