பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா. வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். நாடகங்களிலும் சாதனை படைத்தவர். அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதல் இருந்தது. இதன் உச்சகட்டமாக எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரியாக பேச முடியாமல் தவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.
எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க போவதாக சொல்லி வந்தார். இப்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா மோதலை மையயமாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கக் போவதாகவும், எம்.ஆர்.ராதாவாக நடிக்க சரியான நடிகரை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா தெரிவித்திருக்கிறார்.




