பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா. வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். நாடகங்களிலும் சாதனை படைத்தவர். அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதல் இருந்தது. இதன் உச்சகட்டமாக எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரியாக பேச முடியாமல் தவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.
எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க போவதாக சொல்லி வந்தார். இப்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா மோதலை மையயமாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கக் போவதாகவும், எம்.ஆர்.ராதாவாக நடிக்க சரியான நடிகரை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா தெரிவித்திருக்கிறார்.