மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா. வில்லன் மற்றும் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். நாடகங்களிலும் சாதனை படைத்தவர். அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் தொழில் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மோதல் இருந்தது. இதன் உச்சகட்டமாக எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார் எம்.ஆர்.ராதா. அதன்பிறகு எம்.ஜி.ஆர் சரியாக பேச முடியாமல் தவித்தார். எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது.
எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா, எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கையை திரைப்படமாக தயாரிக்க போவதாக சொல்லி வந்தார். இப்போது எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா மோதலை மையயமாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்கக் போவதாகவும், எம்.ஆர்.ராதாவாக நடிக்க சரியான நடிகரை தேடிக் கொண்டிருப்பதாகவும் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராதிகா தெரிவித்திருக்கிறார்.




