‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
பார்த்திபன் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழா மேடையே ஒரு பூங்கா போல செட் செய்து அற்புதமான லைட்டிங், மேடை அலங்காரங்களுடன் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களையும், விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானையும் அதிர்ச்சியடைய வைத்தது. விழாவில் ரோபோ சங்கர் மைக் கேட்க பார்த்திபன் சற்றே கோபமாகி ரோபோ சங்கரை நோக்கி மைக்கை வீசி எறிந்து, “அதை முன்னாடி இல்ல கேட்கணும்,” என்று கோபமாகப் பேசினார்.
இதுபற்றி பார்த்திபன் நம்மிடம் கூறுகையில், ‛‛ரஹ்மானுக்கு விருது கொடுக்கும் போது அந்த வெள்ளி ஷீல்டு 8 கிலோ இருந்தது. அவர் மேல் அந்த வெயிட் போய் சேர்ந்து விடக் கூடாது என்கிற பதட்டம் இருந்தது. கை, கால்களில் ஏதோ ஷாக் அடித்த மாதிரி ஒரு உணர்வு. அப்போது கொஞ்சம் நிலை தடுமாறிவிட்டேன். கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் வேலை பார்த்தேன். இதுபோன்ற நிறைய காரணங்களால் நான் செய்யக்கூடாத ஒரு விஷயத்தை செய்துவிட்டேன். வருத்தப்பட்டு கொண்டிருக்கிறேன். இனி சரி செய்து கொள்கிறேன்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.