இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பார்த்திபன் இயக்கம் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. விழா மேடையே ஒரு பூங்கா போல செட் செய்து அற்புதமான லைட்டிங், மேடை அலங்காரங்களுடன் தனக்கே உரிய பாணியில் வித்தியாசமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் பார்த்திபன்.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் செய்த செயல் ஒன்று பார்வையாளர்களையும், விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் அதிர்ச்சியடைய வைத்தது. நிகழ்ச்சிக்குத் தாமதமாகத்தான் வந்தார் ரஹ்மான். அவர் வந்ததிலிருந்தே ஏதோ ஒரு பதட்டத்தில் இருந்தார் பார்த்திபன். அதுவரையில் திட்டமிட்டபடி ஒழுங்காக சென்ற நிகழ்ச்சி திடீரென சலசலப்பை ஏற்படுத்தியது.
முதல் சிங்கிள் வெளியிடுவது பற்றிய அறிவிப்பை ரோபோ சங்கர் ஓரிரு வார்த்தைகளில் அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள் போலிருக்கிறது. அந்த சமயத்தில் ரோபோ சங்கர் மைக் வேண்டும் என்று கேட்க, மேடையில் ஏஆர் ரஹ்மானுடன் அமர்ந்திருந்த பார்த்திபன் அங்கிருந்தே ஒரு மைக்கை ரோபோ சங்கரை நோக்கி வீசி எறிந்து, “அதை முன்னாடி இல்ல கேட்கணும்,” என்று கோபமாகப் பேசினார்.
பார்த்திபனின் இந்த செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இருப்பினும் ரோபோ சங்கர், அந்த ஒரு வரி அறிவிப்பை கொஞ்சம் பதட்டத்துடனேயே வெளியிட்டார்.