600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சுப்ராநேஷனல் அழகிப் பட்டத்தையும், அதன்பின் மிஸ் சுப்ராநேஷனல் 2016 அழகிப் பட்டத்தையும் வென்றவர். துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஸ்ரீநிதி. பெங்களூருவில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை முடித்தவர். அதற்குப் பிறகு 'கேஜிஎப்' முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது தமிழில் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையை மாற்றியவர் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கை என்றென்றும் மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த்,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.