தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் 1000 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.
2016ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சுப்ராநேஷனல் அழகிப் பட்டத்தையும், அதன்பின் மிஸ் சுப்ராநேஷனல் 2016 அழகிப் பட்டத்தையும் வென்றவர். துளு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஸ்ரீநிதி. பெங்களூருவில் எலக்ட்ரிகல் என்ஜினியரிங் படிப்பை முடித்தவர். அதற்குப் பிறகு 'கேஜிஎப்' முதல் பாகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தற்போது தமிழில் விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையை மாற்றியவர் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “உங்கள் சொந்த முடிவுகள், உங்கள் வாழ்க்கையை மாற்றி, கனவுகளை அடைய உதவும் போது, சில சமயங்களில் வேறொருவரின் முடிவும் மிக அரிதாக அதைச் செய்யலாம். பிரசாந்த் என்னைத் தேர்ந்தெடுத்தார், என் வாழ்க்கை என்றென்றும் மாறிவிட்டது, அனைத்திற்கும் நன்றி பிரசாந்த்,” என அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.