‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காலத்தால் அழியாத இளையராஜாவின் பழைய பாடல்களை, முதன்முறையாக "டி.டி.எஸ்., ஒலிப்பதிவில் வெளியிட்டுள்ளனர். அவற்றிக்கு, இசைப்பிரியர்களிடம், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிராம போனிலிருந்து, "கேசட் முறைக்கு மாறிய பின், "ஸ்டீரியோ தொழில்நுட்பம் பிரபலமானது. அதன்பின், "டிஜிட்டல் தொழில்நுட்பம் தலைகாட்டி, "சிடிக்கள் வரத்தொடங்கின. 5.1 ஒலியை கடந்து, தற்போது 7.1 ஒலிஅமைப்பு நடைமுறையில் உள்ளது. "டேப் ரிக்கார்டர் உபயோகித்த வீடுகளில், "ஹோம் தியேட்டர் இடம் பிடித்ததால், பழைய பாடல்களை சுவாரஸ்யமாய் கேட்க முடிவதில்லை. "ரீமிக்ஸ் முறையில், பாடலின் உண்மை தன்மை, பாதிக்கப்படுகிறது. அந்த குறையை போக்கும் விதமாக, இளையராஜாவின் பழைய பாடல்களை, அதே இசையில், "டி.டி.எஸ்., முறையில் ஒலி மாற்றம் செய்து, முதன் முறையாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். வெளியாகி உள்ள நான்கு ஆடியோ "சிடிகளும், "5 டிராக் மற்றும் "2 டிராக் என, இரு வடிவங்களில் வெளியாகியுள்ளன. 14 பாடல்கள் கொண்ட ஒரு "சிடியின் விலை ரூ.125. மதுரையில் விற்பனைக்கு வந்த ஒரு வாரத்தில், பெரும்பாலான "சிடிகள் விற்பனையாகியுள்ளன.