பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சினிமாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவை கலந்து கருத்துக்களை கூறிவந்த விவேக், இன்னொரு பக்கம் மரம் நடுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
அந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு தன்னாலான சிறப்பான பங்களிப்பை தந்துள்ள, தனது கணவர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்துவந்த தெருவுக்கு சூட்ட வேண்டுமென அவரது மனைவி அருள்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவரது இந்த கோரிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது, “உண்மையிலேயே இப்படி அவரது தெருவுக்கு விவேக்கின் பெயரை சூட்டுவது அந்த மக்கள் கலைஞனுக்கு செய்யும் மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்” என்றும் வரவேற்றுள்ளார்.