காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த வருடம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சினிமாவில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவை கலந்து கருத்துக்களை கூறிவந்த விவேக், இன்னொரு பக்கம் மரம் நடுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தி பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.
அந்த வகையில் இந்த சமுதாயத்திற்கு தன்னாலான சிறப்பான பங்களிப்பை தந்துள்ள, தனது கணவர் விவேக்கின் பெயரை அவர் இதுநாள் வரை வசித்துவந்த தெருவுக்கு சூட்ட வேண்டுமென அவரது மனைவி அருள்செல்வி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவரது இந்த கோரிக்கை குறித்து நடிகை கஸ்தூரி கூறும்போது, “உண்மையிலேயே இப்படி அவரது தெருவுக்கு விவேக்கின் பெயரை சூட்டுவது அந்த மக்கள் கலைஞனுக்கு செய்யும் மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்” என்றும் வரவேற்றுள்ளார்.