மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப். சில வருடங்களுக்கு முன் நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழுக்கும் வந்தார். முதல் படத்திலேயே மிரட்டலான வில்லத்தனத்தால் ரசிகர்களையும் கவர்ந்தார். இந்தநிலையில் தமிழில் சுந்தர்.சி நடிப்பில் உருவாகிவரும் ஒன் 2 ஒன் என்கிற படத்தில் மீண்டும் வில்லனாக நடிக்கிறார் அனுராக் காஷ்யப். கதாநாயகியாக ராகினி திவேதி நடிக்கும் இந்த படத்தை திருஞானம் இயக்குகிறார். இவர் திரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு என்கிற படத்தை இயக்கியவர்.
இந்த படத்தில் கதாநாயகனுக்கு இணையாக பவர்புல் வில்லன் வேடம் இருந்ததால் பலபேரை பரிசீலனையில் வைத்திருந்தனர். அந்த கதாபாத்திரத்தில் ஒரு பெண்ணை நடிக்க வைக்கலாமா என்று கூட யோசனை செய்யப்பட்டதாம். இறுதியில் அனுராக் காஷ்யப் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த தகவலை அனுராக், சுந்தர்.சி இருவருடனும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் நடிகை குஷ்பு.




