ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள். இந்தப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, தங்கராசு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இவர்களில் தங்கராசு என்பவர் அப்பட நாயகன் கதிரின் தந்தையாக நடித்தார். நாட்டுப்புற கலைஞராக இவர் நடித்து இருந்த வேடம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அதோடு கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாகவும் அமைந்தது.
இந்நிலையில் தங்கராசுவின் வறுமையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. அந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.