வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள். இந்தப்படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு, மாரிமுத்து, தங்கராசு உட்பட பலர் நடித்திருந்தார்கள். இவர்களில் தங்கராசு என்பவர் அப்பட நாயகன் கதிரின் தந்தையாக நடித்தார். நாட்டுப்புற கலைஞராக இவர் நடித்து இருந்த வேடம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. அதோடு கதைக்கு திருப்புமுனை கதாபாத்திரமாகவும் அமைந்தது.
இந்நிலையில் தங்கராசுவின் வறுமையை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அவருக்கு புதிய வீடு ஒன்றை கட்டிக் கொடுத்துள்ளது. அந்த வீட்டை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.




