இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் தற்போது நாக சைதன்யாவுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.
நாக சைதன்யா சொகுசு காரில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பயணம் செய்தார். அவரது காரை வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். காருக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத அளவிற்கு கண்ணாடியில் கருப்பு ஸடிக்கர் ஒட்டியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நாக சைதன்யா காரில் அப்படியான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த ஸ்டிக்கரை நீக்கிய போலீசார். நாக சைதன்யாவுக்கு 715 ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனை கட்டிவிட்டு சென்றார் நாக சைதன்யா. அல்லு அர்ஜூன், மஞ்சு மனோஜ் ஆகியோருக்கும் இதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.