நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் தற்போது நாக சைதன்யாவுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.
நாக சைதன்யா சொகுசு காரில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பயணம் செய்தார். அவரது காரை வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். காருக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத அளவிற்கு கண்ணாடியில் கருப்பு ஸடிக்கர் ஒட்டியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நாக சைதன்யா காரில் அப்படியான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த ஸ்டிக்கரை நீக்கிய போலீசார். நாக சைதன்யாவுக்கு 715 ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனை கட்டிவிட்டு சென்றார் நாக சைதன்யா. அல்லு அர்ஜூன், மஞ்சு மனோஜ் ஆகியோருக்கும் இதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.