சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா போலீசார் அபராதம் விதித்தனர். இந்த நிலையில் தற்போது நாக சைதன்யாவுக்கும் அபராதம் விதித்துள்ளனர்.
நாக சைதன்யா சொகுசு காரில் ஐதராபாத்தின் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் பயணம் செய்தார். அவரது காரை வழிமறித்து போக்குவரத்து போலீசார் சோதனை செய்துள்ளனர். காருக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியே தெரியாத அளவிற்கு கண்ணாடியில் கருப்பு ஸடிக்கர் ஒட்டியிருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். நாக சைதன்யா காரில் அப்படியான கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த ஸ்டிக்கரை நீக்கிய போலீசார். நாக சைதன்யாவுக்கு 715 ரூபாய் அபராதமும் விதித்தனர். அதனை கட்டிவிட்டு சென்றார் நாக சைதன்யா. அல்லு அர்ஜூன், மஞ்சு மனோஜ் ஆகியோருக்கும் இதே குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.