ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகை தனது பிரமாண்டமான படங்கள் மூலம் அடுத்தடுத்த உயரங்களுக்கு எடுத்து செல்பவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது இயக்கத்தில் ஜூனியர் என்.டிஆர், பிரபாஸ், ராம்சரண் என மூவருமே தலா இரண்டு படங்களில் நடித்துவிட்ட நிலையில் மகேஷ்பாபு மட்டும் இதுவரை ராஜமவுலியின் இயக்கத்தில் நடிக்கவில்லை. ரசிகர்களின் இந்த மனக்குறை தீரும் விதமாக அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தான் இயக்க போகிறேன் என சில மாதங்களுக்கு முன் அறிவித்தும் விட்டார். இந்நிலையில் மகேஷ்பாபுவுக்காக இரண்டு கதைகள் தயார்செய்து வைத்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராஜமவுலி.
இதுபற்றி அவர் கூறும்போது, “கொரோனா தாக்கம் துவங்கிய பின்னர் வெளியில் எங்கேயும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்த சமயத்தில் என் தந்தை விஜயேந்திர பிரசாத், வீட்டில் பொழுதை வசதியாக கழித்து விட கூடாது என கூறினார். அந்த சமயத்தில் பலவிதமான ஐடியாக்களை பேசிப்பேசி மகேஷ்பாபு படத்திற்காக இரண்டு விதமான கதைகளை பிடித்தோம்.. இரண்டுமே மிக பிரமாண்டமான பட்ஜெட்டை கேட்கும் கதைகள் தான். அதேசமயம் மகேஷ்பாபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் கதைகள்” என்று கூறியுள்ளார்.