சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவது குறித்து தனது சந்தோசத்தையும் அதே சமயம் தனது மன வருத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார் மரியா ரியபோஷப்கா.
வருத்தத்திற்கு காரணம் தற்போது அவரது சொந்த நாடான உக்ரைனில் நிலவும் சூழல் தான். சொந்த ஊரை பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிறது என்றும் அதே சமயம் தற்போது நிலவும் போர்ச்சூழலும், மக்கள் படும் கஷ்டமும் தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார் மரியா. அதேசமயம் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதன் மூலம் இயக்குனர் அனுதீப், சிவகார்த்திகேயன் போன்ற சுவாரசியமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.