2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக டான் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் தற்போது முதன்முதலாக தெலுங்கு திரையுலகிலும் நுழைந்துள்ள சிவகார்த்திகேயன் ஜதிரத்னாலு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் இருபதாவது படமாக உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியபோஷப்கா என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருவது குறித்து தனது சந்தோசத்தையும் அதே சமயம் தனது மன வருத்தத்தையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளார் மரியா ரியபோஷப்கா.
வருத்தத்திற்கு காரணம் தற்போது அவரது சொந்த நாடான உக்ரைனில் நிலவும் சூழல் தான். சொந்த ஊரை பிரிந்து வந்து பல நாட்கள் ஆகிறது என்றும் அதே சமயம் தற்போது நிலவும் போர்ச்சூழலும், மக்கள் படும் கஷ்டமும் தன்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார் மரியா. அதேசமயம் சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதன் மூலம் இயக்குனர் அனுதீப், சிவகார்த்திகேயன் போன்ற சுவாரசியமான மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.