ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. முதல் நாளில் 100 கோடி, மூன்றே நாட்களில் 500 கோடி என வசூலித்து சாதனை புரிந்த படம், பதினைந்தே நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெட் அறிவித்துள்ளது. “இந்தியாவில் 1000 கோடி என்பது ஒரு படத்திற்கான கனவு ஓட்டம். உங்களுக்காக எங்களுடைய சிறந்ததைச் செய்தோம், அதற்குப் பதிலாக எங்கள் மீது உங்களது விலைமதிப்பில்லா அன்பைச் செலுத்தியுள்ளீர்கள். பீம் என்டிஆர் ரசிகர்களுக்கும், ராமராஜு ராம்சரண் ரசிகர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது இந்தியப் படம் இது. ஆமீர்கான் நடித்த 'டங்கல்', ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' ஏற்கெனவே உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.