ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. முதல் நாளில் 100 கோடி, மூன்றே நாட்களில் 500 கோடி என வசூலித்து சாதனை புரிந்த படம், பதினைந்தே நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெட் அறிவித்துள்ளது. “இந்தியாவில் 1000 கோடி என்பது ஒரு படத்திற்கான கனவு ஓட்டம். உங்களுக்காக எங்களுடைய சிறந்ததைச் செய்தோம், அதற்குப் பதிலாக எங்கள் மீது உங்களது விலைமதிப்பில்லா அன்பைச் செலுத்தியுள்ளீர்கள். பீம் என்டிஆர் ரசிகர்களுக்கும், ராமராஜு ராம்சரண் ரசிகர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது இந்தியப் படம் இது. ஆமீர்கான் நடித்த 'டங்கல்', ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' ஏற்கெனவே உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.