ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. முதல் நாளில் 100 கோடி, மூன்றே நாட்களில் 500 கோடி என வசூலித்து சாதனை புரிந்த படம், பதினைந்தே நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத் தயாரிப்பு நிறுவனமான டிவிவி என்டர்டெயின்மெட் அறிவித்துள்ளது. “இந்தியாவில் 1000 கோடி என்பது ஒரு படத்திற்கான கனவு ஓட்டம். உங்களுக்காக எங்களுடைய சிறந்ததைச் செய்தோம், அதற்குப் பதிலாக எங்கள் மீது உங்களது விலைமதிப்பில்லா அன்பைச் செலுத்தியுள்ளீர்கள். பீம் என்டிஆர் ரசிகர்களுக்கும், ராமராஜு ராம்சரண் ரசிகர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது இந்தியப் படம் இது. ஆமீர்கான் நடித்த 'டங்கல்', ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' ஏற்கெனவே உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.