பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு |

நடிகை நிலா ஞாபகமிருக்கிறதா ?. எஸ்ஜே சூர்யா இயக்கி, நடித்த 'அன்பே ஆருயிரே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அந்த படத்திற்குப் பிறகு சில தமிழ்ப் படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி, கன்னடப் படங்களிலும் நடித்தார். கடைசியாக தமிழில் 2011ல் வெளிவந்த 'கில்லாடி' படத்தில் நடித்திருந்தார்.
தற்போது தனது பெற்றோர் வைத்த பெயரான மீரா சோப்ரா என்ற பெயரையே சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி வருகிறார். அடிக்கடி பதிவுகளையும் பதிவிடுவார். இன்றைய பதிவில் பான்--இந்திய ஹீரோக்களாக வெற்றி பெற்றுள்ள தென்னிந்திய ஹீரோக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“தென்னிந்திய நடிகர்கள் பான்-இந்தியா அங்கீகராம் பெறுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களது திறமை, பணிவு, வேட்கை ஆகியவற்றிலிருந்து ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், யஷ் ஆகியோரை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது” என அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், அவரது லிஸ்ட்டில் ஜுனியர் என்டிஆரைக் குறிப்பிட மறந்துவிட்டார்.