ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நான் திருமணம் செய்ய இருக்கிறேன் என நேற்று கூறிய நடிகை யாஷிகா, இப்போது எனக்கு திருமண வாழ்த்து சொன்ன அனைவருக்கும் முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் (ஏப்., 1) என கூறியுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்தார். கடந்தாண்டு கார் விபத்தில் சிக்கி, தனது தோழியை பறிக்கொடுத்தவர். காலில் பலத்த அடிபட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது முழுமையாக குணமாகி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். பழையபடி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருவதோடு கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று திடீரென தான் திருமணம் செய்ய போவதாக கூறினார். அதுப்பற்றி அவர் கூறுகையில், ‛‛நான் திருமணம் செய்ய இருக்கிறேன். என் பெற்றோர் சம்மதித்துவிட்டனர். இது செட்டிலாகும் நேரம். ஆனாலும் சினிமாவை விட்டு விலக மாட்டேன். எப்போதும் உங்களை மகிழ்விப்பேன். காதல் செட் ஆகாது, இது நிச்சயிக்கப்பட்ட திருமணம். அனைவரின் ஆசீர்வாதம் தேவை'' என்றார்.
![]() |