ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கேரளாவை சேர்ந்தவர் தான் என்றாலும் நடிகை நிவேதா தாமஸ் முழுக்க முழுக்க தனது கவனத்தை செலுத்தி வருவது எல்லாம் தெலுங்கு திரையுலகில் தான். கடந்த எட்டு வருடங்களை கணக்கில் எடுத்து பார்த்தால், தமிழில் பாபநாசம் மற்றும் தர்பார் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதேபோல 2014ல் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மணிரத்னம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் தற்போது மலையாளத்தில் எந்தாடா ஷாஜி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ். இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா என இரண்டு கதாநாயகர்கள் நடிக்கின்றனர். காட்பை பாபு என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோக்கள் இருவருடன் நிவேதா தாமசுக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சமீபத்தில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.