காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, பிசினஸ் என பிஸியாக பெண்ணாக வலம் வருகிறார் நடிகை வனிதா. அதேசமயம் அவரை தேவையில்லாமல் யாராவது சீண்டினால், பழைய சந்திரமுகியாக மாறிவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் அவர் தனது தந்தையை நினைத்து கண்கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் வனிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷனுக்காக வனிதா மற்றும் தியாகராஜன் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் நடிகர் தியாகராஜன் 'அப்பாவ மிஸ் பன்றியா?' என வனிதாவிடம் கேட்கிறார். அதுவரை ஜாலியாக பேசிய வனிதா உடனே கண்கலங்கியவாறு 'நிச்சயமா, ரொம்ப மிஸ் பண்றேன். ரஜினி அங்கிள் எனக்காக அப்பாகிட்ட பேசினாரு. ஆனா முடியல. குடும்பத்தில் பிரச்னை வர்றது இயல்பு தான். அப்பாவோட சீக்கிரமே சேருவேன். விரைவில் நடக்கும்' என கூறியுள்ளார்.
தியாகராஜனும், 'வனிதாவோட அப்பா ரொம்ப நல்லவர். அவர் பொண்ணும் நல்ல பொண்ணு தான். அவங்க குடும்பம் ஒண்ணு சேரணும். அதுதான் என்னோட ஆசை' என அதில் தெரிவித்துள்ளார்.




