என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமா, பிசினஸ் என பிஸியாக பெண்ணாக வலம் வருகிறார் நடிகை வனிதா. அதேசமயம் அவரை தேவையில்லாமல் யாராவது சீண்டினால், பழைய சந்திரமுகியாக மாறிவிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் அவர் தனது தந்தையை நினைத்து கண்கலங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அந்தகன் படத்தில் வனிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் புரோமோஷனுக்காக வனிதா மற்றும் தியாகராஜன் சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அதில் நடிகர் தியாகராஜன் 'அப்பாவ மிஸ் பன்றியா?' என வனிதாவிடம் கேட்கிறார். அதுவரை ஜாலியாக பேசிய வனிதா உடனே கண்கலங்கியவாறு 'நிச்சயமா, ரொம்ப மிஸ் பண்றேன். ரஜினி அங்கிள் எனக்காக அப்பாகிட்ட பேசினாரு. ஆனா முடியல. குடும்பத்தில் பிரச்னை வர்றது இயல்பு தான். அப்பாவோட சீக்கிரமே சேருவேன். விரைவில் நடக்கும்' என கூறியுள்ளார்.
தியாகராஜனும், 'வனிதாவோட அப்பா ரொம்ப நல்லவர். அவர் பொண்ணும் நல்ல பொண்ணு தான். அவங்க குடும்பம் ஒண்ணு சேரணும். அதுதான் என்னோட ஆசை' என அதில் தெரிவித்துள்ளார்.