சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா |

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவரது 41ஆவது படமான இந்தப் படம் மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து தற்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக மமிதா பைஜு என்ற மலையாள நடிகை நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா இந்த படத்தில் சோனா என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் மமிதா பைஜூவுக்கு ஒரு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளாராம் பாலா.