நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவரது 41ஆவது படமான இந்தப் படம் மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து தற்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக மமிதா பைஜு என்ற மலையாள நடிகை நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா இந்த படத்தில் சோனா என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் மமிதா பைஜூவுக்கு ஒரு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளாராம் பாலா.