பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவரது 41ஆவது படமான இந்தப் படம் மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகிறது. நேற்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து தற்போது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக மமிதா பைஜு என்ற மலையாள நடிகை நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா இந்த படத்தில் சோனா என்ற கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கும் மமிதா பைஜூவுக்கு ஒரு வித்தியாசமான வேடம் கொடுத்துள்ளாராம் பாலா.