68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு |
சென்னையை அடுத்த சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாக முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னணியில் விசாரணைக்காக ஆஜராகி இருந்தார் சூரி. அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛‛என்னுடைய இந்த வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நான் பண விவகாரத்தில் நம்பி ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கில் முதலில் அடையாறு காவல் நிலையத்தில் நடந்து கொண்டிருந்தது. திருப்திகரமாக விசாரணை நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தேன். அதையடுத்து தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடக்கிறது.
இதுதொடர்பாக இன்று விசாரணைக்கு வந்துள்ளேன். நிச்சயமாக எனக்கு இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும். நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மட்டுமே நான் நம்பி இருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. காவல் துறையினர் எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகி பதில் கொடுத்து வருகிறேன். கட்டாயமாக தப்பு செய்தவர்கள் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் சூரி. மேலும் சூரி தன்னிடம் பண மோசடி செய்ததற்காக புகார் அளித்துள்ள முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா, நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.