தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நெடுநல்வாடை படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி நாயர். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிக்க வந்தார். அந்த படத்திற்கு பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது அவர் விகரம் பிரபு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நெடுல்வாடை படம் வெளிவந்த உடன் நடிக்கத் தொடங்கிய படம் இது. கொரோனா காலத்தால் தாமதமாகி இப்போது வெளியாகி உள்ளது. அதனால் சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். டாணாக்காரன் படத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ரைட்டராக நடித்திருக்கிறேன். அங்கு பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபுவை காதலிக்கிற மாதிரியான கதை. போலீசாக நடிப்பதற்கு பெரிய பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இயக்குனர் சொல்லியபடி நடித்தேன். கிளாமராக நடித்து பெயர் வாங்க விரும்பவில்லை. நல்ல சவாலான கதைகளில் நடித்து பெயர் வாங்கவே விரும்புகிறேன். என்றார்.