‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த நெடுநல்வாடை படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி நாயர். விமான பணிப்பெண்ணாக இருந்து நடிக்க வந்தார். அந்த படத்திற்கு பிறகு சில மலையாள படங்களில் நடித்தார். தற்போது அவர் விகரம் பிரபு ஜோடியாக டாணாக்காரன் படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நெடுல்வாடை படம் வெளிவந்த உடன் நடிக்கத் தொடங்கிய படம் இது. கொரோனா காலத்தால் தாமதமாகி இப்போது வெளியாகி உள்ளது. அதனால் சற்று இடைவெளி ஏற்பட்டு விட்டது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். டாணாக்காரன் படத்தில் போலீஸ் பயிற்சி மையத்தில் பணியாற்றும் ரைட்டராக நடித்திருக்கிறேன். அங்கு பயிற்சிக்கு வரும் விக்ரம் பிரபுவை காதலிக்கிற மாதிரியான கதை. போலீசாக நடிப்பதற்கு பெரிய பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இயக்குனர் சொல்லியபடி நடித்தேன். கிளாமராக நடித்து பெயர் வாங்க விரும்பவில்லை. நல்ல சவாலான கதைகளில் நடித்து பெயர் வாங்கவே விரும்புகிறேன். என்றார்.