ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் மலையாளத்தில் நடித்த லூசிபர் படத்தின் ரீமேக்காக இது உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு, சிரஞ்சீவியுடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், “சிரஞ்சீவியை எப்போது சந்தித்தாலும் மகிழ்ச்சி தான்.. அந்த அளவுக்கு அன்பான பண்பான நட்பான ஒரு மனிதர்” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி நடித்து வரும் காட்பாதர் படத்தில் குஷ்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அதன் படப்பிடிப்பிற்காக தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார் என்றும் செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. கடந்த 2006-ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக குஷ்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.