Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திமுக என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது : கஸ்தூரி

25 மார், 2022 - 12:11 IST
எழுத்தின் அளவு:
Safety-of-women-in-TN-under-DMK-is-fear-says-Kasthuri

கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி சம்பவம் போன்ற ஒரு பாலியல் கொடூரம் விருதுநகரில் நடந்துள்ளது. சமீபகாலமாக பாலியல் வன்முறைகள் அதிகரித்தும் உள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

பாலியல் குற்றச்செய்திகள் புற்றீசல் போல் புறப்பட்டு வருகின்றன. அதில் அதிகம் சிறார்கள் சம்பந்தப்பட்டு இருப்பது மிகவும் கவலையளிக்கிறது. வேலூரில் ஆட்டோவில் ஒரு இளம் ஜோடியை கடத்தி சென்று பெண்ணை கற்பழித்த கும்பலில் ஒருவன் 18 வயத்துக்குட்பட்டவன். விருதுநகரில் இளம்பெண்ணை மிரட்டி கூட்டாக கற்பழித்தவர்களில் 4 பள்ளி மாணவர்களும் அடக்கம்.

அந்த பெண் உதவி கேட்டு அணுகியவரும் கூட அவரை... தமிழ்நாட்டில் எங்கே போகிறோம்? எங்கே போகிறோம்? என்று நாம் கேட்டு கொண்டே இருக்கையில், தமிழ்நாடு நாசமாய் போய்விட்டது . திருத்த முடியாத, திருந்த முடியாத அதலபாதாளத்திற்குள் வீழ்ந்து விட்டோமா?

இந்த விஷயத்தில் துரித நடவடிக்கை எடுத்துள்ள தமிழக காவல்துறைக்கு நன்றி . முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் பேசும்போது கட்சி சார்பு பார்க்காமல் விசாரணை நடத்தப்படும் என்கிறார். விரைவாக தண்டனை கொடுக்கப்படும் என்கிறார். இது உண்மையாக நடந்தால் நன்றி தெரிவித்து பாராட்டும் முதல் ஆளாக நான் நிற்ப்பேன்.

திமுக என்றாலே தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற முதலமைச்சரே முனைப்புடன் இறங்கினால் அதை விட நம்பிக்கை தரும் விஷயம் என்ன இருக்க முடியும்? கட்சி, குடும்பம், பணம், பதவி போன்ற கட்டாயங்களை கடந்து, சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு இவற்றை இந்த அரசு சாதிக்குமா? சாதிக்குமேயானால் அதை கொண்டாடும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்...யாருக்கும் பயப்படாமல் எதற்காகவும் பின் வாங்காமல் நடந்த அநீதியை நிரூபிக்க வேண்டியது காவல் துறையின் கடமை. குறைந்த காலத்திலேயே குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும், அந்த கயவர் கூட்டம் தண்டிக்கப்பட வேண்டும்.

முக்கியமாக, வயதை காரணமாக காட்டி அந்த பள்ளி மாணவர்கள் தப்பிக்க கூடாது. அப்படியே சட்டப்படி தண்டனை கிடைக்காது என்ற நிலைமை வருமென்றால், கடவுளாக பார்த்து அந்த கயவர்களுக்கு சரியான முடிவை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு கஸ்தூரி எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புனித் ராஜ்குமாருக்கு டாக்டர் பட்டம்: மைசூர் பல்கலைகழகம் வழங்கியதுபுனித் ராஜ்குமாருக்கு டாக்டர் ... 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்கும் குஷ்பூ ? 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in