ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு, தமிழ் இரண்டிலும் கதாநாயகியாக நடித்து வரும் ரெஜினா விரைவில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாக உள்ள ஆச்சார்யா திரைப்படத்தில் சானா கஸ்டம் என்ற ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும், அவர்களுக்கு என இதுபோன்று குத்து பாடல்கள் இல்லாமல் ரெஜினாவுக்கு மட்டுமே அது ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் தான் ஒரு பாட்டுக்கு ஆடியது இதுதான் முதலும் கடைசியும் என ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ரெஜினா.
இதுபற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது, ஒரு பாட்டுக்கு ஆடுவதில் எனக்கு எப்பவும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் ஒரே ஒருவரை தவிர, நான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறும்போது கூட, சிரஞ்சீவியுடன் மட்டும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாட்டுக்காவது ஆடி விட வேண்டும் என்ற எனது ஆசையை தெரிவித்து இருந்தேன். காரணம் அது என் பாக்கெட் லிஸ்ட்டில் இடம்பிடித்த ஆசைகளில் ஒன்று. அதற்கேற்றார் போல் ஆச்சார்யா படத்தில் வாய்ப்பு வந்ததும் எந்த மறுபேச்சும் பேசாமல் ஒப்புக்கொண்டேன். சிரஞ்சீவியுடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற வேறு இனிய அனுபவம் ஏதாவது இருக்கிறதா என்ன ? ஆனால் அவருடன் சேர்ந்து ஆடிய பின் இதுவே ஒரு பாடலுக்கு ஆடுவது முதலும் கடைசியுமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரெஜினா.