லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? |
சமீபத்தில் பிரபாஸ் பூஜா ஹெக்டே நடிப்பில் பான் இந்தியா படமாக ராதே ஷ்யாம் வெளியானது. ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருந்த இந்தப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இல்லாததும், முழுநீள காதல் கதையாக இருந்ததும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது. இதனால் தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் வருகை குறைந்ததுடன் படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் அடைந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆந்திராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு கோகிநேனி என்பவர் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் கைரேகை ஜோதிட வல்லுனராக நடித்திருந்த பிரபாஸ் குறித்தும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த படத்தின் நாயகன் விக்ரமாதித்யா கைரேகை பார்த்து மற்றவர்களின் எதிர்காலத்தை சொல்பவராக நடித்துள்ளார். இந்த படம் ஒப்புக் கொள்வதற்கு முன்பு தயாரிப்பாளரின் கைரேகைகளை அவர் பார்த்திருந்தால் இவ்வளவு பெரிய நட்டம் வருவதை தவிர்த்திருக்கலாமே என்று கூறியுள்ளார். மேலும் இந்த படம் குருட்டுத்தனமான நம்பிக்கைகளையும் வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் பதிவுகளையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.