அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தில் மலைவாசி பெண் செங்கனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மலையாள நடிகை லிஜோமோல் ஜோஸ். அதற்கு முன்னதாக தமிழில் சித்தார்த்துக்கு ஜோடியாக சசி இயக்கத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை என்கிற படத்தில் நடித்திருந்தாலும் ஜெய்பீம் படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளம் பெற்றுத் தந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான மகேஷின்டே பிரதிகாரம் படத்தில் அறிமுகமான லிஜோமோல் மலையாளத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
அடுத்து தமிழில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்ததும் மலையாளத்திலிருந்து இவரை தேடி பட வாய்ப்புகள் வருவது குறைந்து விட்டதாம். ஆனால் ஜெய்பீம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவரைத்தேடி மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் தற்போது புலிமட என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், விஷுத மேஜோட் என்கிற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் லிஜோமோல். விரைவில் இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றனவாம்.