நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. பல்வேறு நீதிமன்ற பிரச்சினைகளுக்கு பிறகு நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் விஷால் தலைமையிலான அணியினர் பெரும் வெற்றி பெற்றனர். தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணை தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் தேர்வானார்கள்.
இவர்கள் தவிர்த்து 21 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். இவர்கள் அனைவரும் விஷால் அணியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் நடிகை குஷ்பு 1407 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். கோவை சரளா 2வது இடத்தையும், ராஜேஷ் 3வது இடத்தையும் பெற்றார்.
செயற்குழு உறுப்பினர்களாக தேர்வான மற்றவர்கள் வருமாறு: மனோபாலா, அஜய்ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, சிபிராஜ், லதா, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், ஸ்ரீமன், ஜெரால்டு, ரத்தன்பா, மா.பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளிமுத்து.