படத்திலிருந்து நீக்கபட்டது குறித்து வருத்தப்பட்ட மகிமா நம்பியார் | சமூக வலைதள கணக்கை நீக்கிய தனுஷ் பட இயக்குனர் | தனது வீட்டின் பணி பெண்ணிற்கு உதவிய அல்லு அர்ஜுன் | நித்யா மேனனுக்கு விட்டுக் கொடுத்த ஜெயம் ரவி | சிம்பு 48வது படம் : தேசிங்கு பெரியசாமியை வாழ்த்திய ரஜினி | இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது : ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சீறிய சமுத்திரக்கனி | மறைந்த பிரதமர் இந்திரா உடன் உரையாடிய கங்கனா | மாயமான கேரள கப்பலின் பின்னணியில் படம் இயக்கும் ‛2018' பட இயக்குனர் | இயக்குனராக மாறிய ஊர்வசியின் கணவர் | தடைகளை தாண்டி 'துருவ நட்சத்திரம்' வெளிவரும்: கவுதம் மேனன் அறிக்கை |
அடுத்து வெளிவர இருக்கும் ஜி.வி.பிரகாஷ் படம் செல்பி. இதில் அவர் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். இவர்களுடன் கவுதம் வாசுதேவ மேனன், வித்யா பிரதீப், வேங்கை சந்திரசேகர், சங்கிலி முருகன் உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது : இது இதுவரை யாரும் சொல்லாத கதை. கல்வி நிறுவன மோசடிகள், கல்லூரி வளாக அரசியல் குறித்து நிறைய படங்கள் வந்திருக்கிறது. இது கல்வி மாபியாக்களின் கதை. பிரபலமான கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள். அந்த கல்லூரியில் மாணவர்களை புதிதாக சேர்த்து விட்டால் அவர்களுக்கு கல்வி நிறுவனம் கமிஷன் கொடுக்கும், மருத்துவ கல்லூரிகளுக்கு கோடிகணக்கில் பணம் புரளும். இந்த தொழிலில் ஈடுபடும் மாணவர்கள் காலப்போக்கில் படிப்பை மறந்து இதனையே முழுநேர தொழிலாக்கி கல்வி மாபியாக கேங்கிற்குள் நுழைந்து வாழ்க்கையை நாசமாக்கி கொள்வார்கள். அவர்களை பற்றிய கதைதான் இது.
எனது சொந்த நண்பனுக்கு நேர்ந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அதில் கற்பனை கலந்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். இது ஒவ்வொரு மாணவனுக்கும், மாணவனது பெற்றோர்களுக்கும் நல்ல பாடத்தை தரும். எந்த ஒரு கல்வி நிறுவனத்தையோ, தனிப்பட்ட நபர்களையோ குறிப்பிடாமல் பொதுவான கண்ணோட்டத்தில் இந்த விஷயத்தை பேசியுள்ளது படம். என்றார்.