ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகளை கொல்ல நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியதாக புதிய வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளைக்கு எதிராக கடத்தப்பட்ட நடிகை எர்ணாகுளம் பார் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: வழக்கிறஞர் ராமன் பிள்ளை நான் கடத்தப்பட்ட வழக்கில் பல சாட்சிகளை கலைத்துள்ளார். விசாரணையின் தொடக்க கட்டத்தில் எனக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர் பல்டி அடித்ததற்கு ராமன் பிள்ளையின் தலையீடுதான் காரணமாகும். அவரும், அவரது உதவியாளர்களும் பல சாட்சிகளை பணம் கொடுத்து விலைக்கு வாங்கினர். பணம் வாங்காதவர்களை மிரட்டியும் உள்ளனர்.
சாட்சிகளை எதிர்தரப்பு வழக்கறிஞர் எந்த காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாது. ஆனால், அதை மீறி ராமன் பிள்ளை இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மேலும், திலீப்பின் செல்போனில் இருந்த விவரங்களை அழிப்பதற்கும் அவரது துணை வழக்கறிஞர்கள் உதவி செய்துள்ளனர். இவை வழக்கறிஞர் தொழில் சட்டத்துக்கும், நேர்மைக்கும் எதிரானதாகும். எனவே, திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளை மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நடிகை புகாரில் குறிப்பிட்டுள்ளார்.